மிதுனம்

மிதுனம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை மிருகசீரிடம் 3,4 பாதம் , திருவாதிரை 4 பாதம் முடிய , புனர்பூசம் 1, 2,3 பாதம் வரை . பலன்கள் மதிப்பு 60%







சனி  பகவான்  மிதுன ராசிக்கு  8க்கும்  9க்கும்  உரியவர் . யோகக்காரர் .அவர்  கடந்த  காலம் முழுவதும்  5ம்  இடத்தில் உச்சம்  பெற்று , 8ம்  இடபலனையும்  சேர்த்து  கொடுத்திருப்பார் . 5ம்  இடம்  சிறந்த  இடமில்லை  என்றாலும்  , 9ம்  இடத்து  அதிபதி சனி பகவான்  5ல் லிருந்து  கடந்த   இரண்டரை  வருடம் , நல்ல  பலனும் கொடுத்திருப்பார் ,   கெட்ட  பலனும்  கொடுத்திருப்பார் . ஆனாலும்  கடந்த காலம்  சனி பகவானால்  நன்மை  அடைந்திருபிர்கள் . சனி பகவான்  தற்போது  ராசிக்கு  6ம்  உபஜய ஸ்தானத்தில்  சஞ்சரிக்கபோகிறார் . இது சனி  பகவானின் பகை வீடு .இந்த  நீர் ராசியில்  சஞ்சரிக்கும் பொழுது  மிதுன ராசிக்காரகள்   வெளிநாடு  செல்ல  வாய்ப்பு  உண்டாகும்  . சொந்த  தொழில் செய்பவர்கள்  நன்மை அடைவார்கள் . 10ம் இடத்துக்கு  9ம் இடத்தில சனி பகவான்  சஞ்சரிப்பதால்  சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல  லாபம் அடைவார்கள் . இந்த  இரண்டரை ஆண்டு  நல்ல பலன்கள் , அதிகமாகவும் , கெடுபலன்கள்  குறைவாகவும்  நடக்கும் .



சனி பகவான்  குரு  பகவானின்  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல பலன்கள்  கொடுக்க மாட்டார் . இந்த நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  தொழில் நஷ்டமடையும் .  உடல்  நலம் பாதிக்க படும் . 7ம் இடத்துக்கு  12ம் இடத்தில சஞ்சரிக்கும்  மனைவியால் மருத்துவ  செலவு உண்டு .



சனி  பகவான்  தன் சொந்த  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் பொழுது   நல்ல பலன்களை  வாரி வழங்குவார் . 10 ம்  இடத்துக்கு  9ம்  இடத்தில் , குரு  பகவான்  பார்வை  வேறு , அதனால்  சொந்த தொழில் செய்பவர்கள் ,   தொழிலில்  அதிக லாபம்  கிடைக்கும் . அலுவலகத்தில் பணி  புரிபவர்கள்  , எதிர்  பாராவிதமாக பதவி கிடைக்கும் . 9ம் இடத்துக்கு  12ம்  இடம்  , ராசிக்கு  8ம் இடம் , 8ம் இட  அதிபதிக்கு  பாதகதிபதியும் , கர்மஸ்தனதிபதி குரு  பகவான்  பார்வை  சனிக்கு , இதனால்  தந்தை  பாதிக்கபடுவார் . மருத்துவ  செலவு  ஏற்படும் . மேலும்  குழந்தைகள்  உடல் நிலை  பாதிக்கும் .



சனி பகவான்  கேட்டை  நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  நல்ல  பலன்களை  சனி  பகவான்  கொடுப்பார் . குழந்தைகள்  நன்றாக படிப்பார்கள் .சனி திசை  நடந்தால்   அமோகமான  பலன்கள்  கிடைக்கும்  மிதுன ராசிக்கு 



பரிகாரம் 



அனுஷம் , உத்திரட்டாதி , பூசம்  , இந்த  நட்சத்திரம்  வரும்  நாட்களில் , விரதமிருந்து  தீபம் ஏற்றிவந்தால்   நல்ல பலன்கள்  கிடைக்கும் ,



குறிப்பு  



தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள்.












கருத்துகள்