கடகம்

கடகம் - சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . புனர் பூசம் 4 ம் பாதம் , பூசம் 4 பாதம் முடிய , ஆயில்யம் 4 பாதம் முடிய பலன்கள் மதிப்பு 40 %





சனி  பெயர்ச்சி  கடக ராசிக்கு  சுமாரான  பலன்களே  கொடுப்பார்  . கடந்த இரண்டரை  வருடம்  அர்த்தஷ்டமா  சனி , படாதபாடு  படுத்திருப்பார் . அனால் இந்த  இரண்டரை வருடம்  அந்த கஷ்டங்கள்  இனி இல்லை . 16.12.2014 அன்று  சனி பகவான்  பெயர்ச்சி  ஆகி  உங்கள்  ராசிக்கு  5ம் இடத்துக்கு  வருகிறார் . இந்த இடம்  சனி பகவானுக்கு  உகந்த இடம் இல்லை . கடக ராசிக்கு  சனி பகவான்  பகை பெற்றவர் . 7ம் இடம்  மற்றும்  8ம்  இடம் இடத்துக்கு  உரியவர் . 5ம் இடத்தில் சனி  பகவான்  சஞ்சரிக்கும்போழுது , குழந்தைகளுக்கு  ஆகாது . பிள்ளைகளுடன்  சண்டை சச்சரவு  ஏற்படும் . மேலும்  பூர்வீக  இடங்களால் , வழக்கு  ஏற்பட்டு  நீதிமன்றம் வரை  செல்ல நேரிடும் .  வேலை யில்   உள்ளவர்கள்  இடம் மாறுவார்கள் . சொந்த தொழில் செய்பவர்கள்  வேறு  தொழில்  செய்ய  வழி வகுக்கும் .



சனி  பகவான்  ""விசாகம் "" நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்போழுது, வம்பு  , வழக்கு , தந்தைக்கு   மருத்துவ செலவு  போன்றவைகள்  நிகழும் . இந்த காலகட்டத்தில்  பிள்ளைகளின்  படிப்பு மந்த நிலை  ஏற்படும் . 10ம்  இடத்துக்கு  8ம் இடம்  5ம் இடம் . இதனால்  சொந்த தொழில்  செய்பவர்கள்  நஷ்டம்  அடைவார்கள் .



சனி பகவான்  "'அனுஷம்  "" நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழுது  பிள்ளைகளுக்கு  மருத்துவ  செலவு  உண்டாகும் . இந்த  கால கட்டத்தில்  பூர்விக  இடத்தால்  பிரச்சனை  ஏற்படும் . மனைவி  வழியில்  திடீர் பணவரவு  ஏற்படும் . 2015  ஜூன்  மாதம் வரை  சனி பகவானை  குரு பகவான்  5ம் பார்வையால்  பார்ப்பதால்  6 மாதம் வரை எந்த  கஷ்டமும்  வராது .



சனி பகவான் ""கேட்டை " நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும்  பொழு  குடும்பத்தில்  விரய செலவு  ஏற்படும் . சனி பகவான்  ராசிக்கு  இரண்டாம் இடத்தை  தன் 10ம்  பார்வையால்  பார்ப்பதால்  வருமானம்  தடைபடும் .10ம் இடத்துக்கு  2ம் இடத்தை சனி பகவான்   தன் 7ம்  பார்வையால்  பார்ப்பதால்  , சொந்த தொழில் செய்பவர்கள்  நஷ்டம்  அடைவார்கள் .  7ம் இடத்தை  சனி பகவான்  தன் 3ம்  பார்வையால்  பார்ப்பதால்  மனைவிக்கு  மருத்துவ செலவு  ஏற்படும் .



கடக  ராசிக்காரர்கள்  , 1 வருடம்  சனி பகவானின்  இன்னல்களை அனுபவித்து  ஆகவேண்டும் . மீதி  ஒன்றரை வருடம்  குரு  பகவானின்  அருளால்  கஷ்டங்கள்  குறையும் .



பரிகாரம் 



சனி கிழமை  தோறும் , நல்லெண்ணெய்  ஏற்றி வழி பட்டால் கஷ்டங்கள்  குறையும் .




குறிப்பு  



தீபம்  ஏற்றும் பொழுது  சுத்தமான  நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம்   ப்ராண்ட்  நல்ல எண்ணெய்  உபயோகிங்கள் 

கருத்துகள்