சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . உத்திரம் 2,3,4, பாதம் வரை , ஹஸ்தம் 4 பாதம் முடிய , சித்திரை 1,2 , வரை . பலன்கள் மதிப்பு 70%
சனி பகவான் கன்னி ராசிக்கு யோகக்காரர் ! அவர் ராசிக்கு 5ம் இடம் மற்றும் 6ம் இடத்துக்கு உரியவர் .நல்லது 70 %செய்தாலும் , 30% கெட்ட பலனையும் கொடுப்பார் . ஏனென்றால் ராசிக்கு 6ம் இடம் ஆதிபத்தியம் பெற்றதனால் கெட்ட பலனும் கொடுக்க வேண்டும் என்பது விதி . இந்த சனி பெயர்ச்சி ஏழரை சனி விடும் காலம் . இனி கன்னி ராசிக்கு பொற்காலம் .சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்துக்கு வருகிறார் , இதனால் திருமணம் ஆகாத கன்னி ராசி காரர்களுக்கு திருமணம் வாய்ப்பு கைகூடும் . 3ம் பார்வையால் 5ம் இடத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும் .நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் .
சனி பகவான் பெயர்ச்சி ஆகி ஒரு மாத காலம் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் .இந்த ஒருமாதகாலம் நல்ல பலன்கள் நடக்க வாய்ப்பு இல்லை . ஏனென்றால் கன்னி ராசிக்கு பாதகாதிபதி குரு, அதனால் பாதகாதிபதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது மனைவி இடம் கருத்து வேறுபாடு வரும் , சண்டை சச்சரவு ஏற்படும் .
சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும்போழுது நல்ல பலன்களை வாரி வழங்குவார் . செய்யும் தொழிலில் மேன்மை அடையும் . கடன் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் .திருமணம் கைகூடும் .சுப நிகழ்சிகள் நடக்கும் .படிக்கும் மாணவர்களுக்கு வெளி நாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும் .
சனி பகவான் புதன்னின் நட்சத்திரமான கேட்டையில் சஞ்சரிக்கும் பொழுது , சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள் . வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் . வெளி நாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் .
மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு , கடந்த ஏழரை வருடதில் இழந்ததை மீட்டுவிடலாம் . இருந்தாலும் , அவ்வபோது சிறு தடங்கல் ஏற்படும் . இதனால் நல்ல பலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது !
பரிகாரம்
திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிக்கவும் .
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உபயோகிங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.