சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை . சித்திரை 3, 4, பாதம் முடிய , சுவாதி 4 பாதம் வரை , விசாகம் 1,2,3, பாதம் வரை . பலன்கள் மதிப்பு 40%
சனி பகவான் துலாம் ராசிக்கு யோகக்காரர் ! அவர் 4ம் இடம் , மற்றும் 5ம் இடத்துக்கு உரியவர் . இவர் துலாம் ராசி , லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு நல்லபலன்களை கொடுப்பார் . ஆனால் கடந்த 5வருடமாக நல்ல பலன்கள் கொடுக்கவில்லை , ஏனென்றால் ,ஏழரை சனி நடந்து கொண்டுஇருப்பதால் .தற்போது ஜென்ம சனி விலகும் காலம் , இனி நல்ல காலம் . சனி பகவான் 16.12.2014 அன்று பெயர்ச்சி ஆகி , விருச்சிக ராசிக்கு வருகிறார் . இது ராசிக்கு 2ம் இடம் , இது நல்ல இடமில்லை . இருந்தாலும் கடந்த காலம் நடந்த கஷ்டங்கள் இப்போது நடக்காது .ஏழரை சனியின் 3ம் பாதம் , படிப்படியாக கடன் குறையும் . சுப நிகழ்சிகள் நடக்கும் . வம்பு வழக்கு முடிவுக்கு வரும் . நீதி மன்றத்தில் வழக்கு இருந்தால் அதுவும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் .
சனி பகவான் , குரு பகவான் நட்சத்திரமான விசாகம் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் பணத்தட்டுப்பாடு வரும் . மனைவிக்கு மருத்துவ செலவு ஏற்படும் . வண்டி வாகனங்களால் விரயம் உண்டாகும் . இந்த காலக்கட்டங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் .
சனி பகவான் தன் சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது , கடன் சுமை குறையும் . பணவரவு ஏற்படும் . இடம் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . பிள்ளைகள் வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு வரும் . தாயாரால் பண உதவி கிடைக்கும் . சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் . அலுவலகத்தில் பணி புரிபவர்கள் பதவி உயர்வுடைவார்கள் .
சனி பகவான் , தன நட்பு கிரகமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சுப நிகழ்சிகள் நடக்கும் . தந்தையால் பண உதவி கிடைக்கும் . சொத்துக்களால் லாபம் உண்டாகும் . வம்பு , வழக்கு , முடிவுக்கு வரும் .
மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி கடந்த காலம் இழந்ததை , சனி பகவான் ஏழரை சனி முடியும் காலம் கொடுத்துவிட்டு செல்வார் . இருந்தாலும் அவ்வபொழுது சின்ன , சின்ன , கஷ்டங்கள் வரும் .ஏனென்றால் ஏழரை சனி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன .
பரிகாரம்
சனிகிழமை விரதம் இருந்து , சனி பகவான் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும் .
குறிப்பு
தீபம் ஏற்றும் பொழுது சுத்தமான நல்லெண்ணையை ஏற்றவேண்டும் . இதயம் ப்ராண்ட் நல்ல எண்ணெய் உபயோகிங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.