சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 - 20.11.2017 வரை அஸ்வினி 4 பாதம் முடிய, பரணி 4 பாதம் முடிய , கிருத்திகை 1 பாதம் முடிய , பலன்கள் மதிப்பு 55%
சனி பகவான் மேஷ ராசிக்கு பகை பெற்றவர் . ராசிக்கு பாதகதிபதி , மற்றும் 10ம் இடம் , 11ம் இடத்துக்கு உரியவர் .கடந்த இரண்டரை வருடம் மாரக ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்து பல கஷ்டங்களை கொடுத்தார் . ஆனால் இந்த ஜய வருட சனிபெயர்ச்சி மேஷ ராசிக்கு அஷ்டம சனியாக வருகிறார் . ஆனால் மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியை பார்த்து பயப்பட தேவையில்லை . ஏன் என்றால் டிசம்பர் 16ந் தேதி சனி பகவான் பெயர்ச்சி ஆகி விருச்சிக ராசிக்கு வருகிறார் . விருச்சிக ராசியில் உள்ள சனி பகவானை கடகத்தில் உள்ள உச்சம் பெற்ற குரு பகவான் பார்வை பெறுகிறார் . இதனால் 6 மாதம் வரை எந்த பிரச்சனை வந்தாலும் பாதிப்பு ஏற்படாது . அதன் பிறகு 1 வருடம் குரு பகவான் ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்து மேஷ ராசிக்கு ஏற்படும் அஷ்டம சனியின் கஷ்டங்களை இல்லாமல் செய்வார் . மேஷ ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனியின் தாக்கம் 1 வருடம் மட்டும் தான் சிரமமாக இருக்கும் .
சனி பகவான் டிசம்பர் 16ந்த் தேதி முதல் விசாகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தந்தைக்கு உடல் உபாதை , மருத்துவ செலவு ஏற்படுத்துவார் . தன 3ம் பார்வையாக 10ம் இடத்தை பார்ப்பதால் , தொழிலில் சிரமங்களை கொடுத்தாலும் நஷ்டம் ஏற்படாது .சந்திரனுக்கு 8ம் இடத்தில சனி இருப்பதால் தாயுடன் மன ஸ்தாபம் ஏற்படும் . தொழில் ஸ்தானத்துக்கு பாதகமான இடத்தில சனி இருப்பதால் லாபம் எதிர்பார்க்க முடியாது .
சனி பகவான் தன சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் சஞ்சரிக்கும் பொழுது சொந்த தொழில் , மற்றும் வேலையில் உள்ளவர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள் . சனி பகவான் 7ம் பார்வையாக 2ம் இடத்தை பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படும் . இதனால் கடன் வாங்க நேரிடும் . 10ம் பார்வையால் 5ம் இடத்தை பார்ப்பதால் , பூர்வீக சொத்துக்களால் பிரச்சனை ஏற்படும் . மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படும் .
சனி பகவான் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது , சகோதர உறவு பாதிக்க படும் . மற்றும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லைகள் கொடுப்பார்கள் . தொண்டை சம்பந்தமான வியாதி வந்து அகலும் .படிப்பில் மாணவர்கள் மந்த நிலையை அடைவார்கள் .
மேஷ ராசிக்கு இரண்டரை வருடம் அஷ்டம சனியில் 1 வருடம் மட்டும்தான் கஷ்டங்கள் கடுமையாக இருக்கும் . மீதி ஒன்றரை வருடம் குருபகவானின் அருளால் நல்லதே நடக்கும் .
பரிகாரம்
அஷ்டம சனி ஆரமித்த நாள் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து , காகத்துக்கு சாதம் வைத்த பிறகு மதிய உணவு அருந்தவும் .
கால பைரவருக்கு நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும் .

கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.